கிளிநொச்சி பாடசாலை விளையாட்டுப் போட்டியில் தாக்குதல்! மாணவர்கள் போராட்டம் (video)
கிளிநொச்சியில் பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிராம மட்ட அமைப்புக்கள், பெற்றோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கான காரணம்
நேற்று (30.03.2023) பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடைபெறுகையில் மைதானத்திற்குள் நுழைந்த ஆறு பேர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.