கிளிநொச்சியில் தொடரும் தொடருந்து விபத்துகள் - புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(31.08.2026) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடருந்து கடவை புனரமைப்பு
இதன்போது, கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார் 35க்கும் மேற்பட்ட பாதுகாப்புபற்ற கடவைகள் காணப்படுகின்றன. இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு போராட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மத்த தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், போக்குவரத்து அமைச்சர், தொடருந்து திணைக்களம் ஆகியவற்றிற்கான மனுக்களும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15