இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு நீதி வேண்டி கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு நீதி வேண்டியும் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மீது தருமபுரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி வேண்டியும், அதன் தொடர்ச்சியாகக் கடந்த திங்கட்கிழமை காலை இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்மீதும் தருமபுரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் இவ்வார்ப்பாட்டம் இன்று பகல் 9 மணிக்கு வட்டக்கச்சி சந்தியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொலையை கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தரும்புரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் இன்று வட்டக்கச்சி பிரதேசத்தில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை முழுமையாக மூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லையென்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri
