ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் போராட்டம் (video)
ஜனாதிபதியின் யாழ் வருகை எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய கட்சியின் எம்.கே சிவாஜிலிங்கம் நேற்று (11.02.2023) யாழ்ப்பாணம் காந்தி சிலைக்கு அருகில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
இப்போராட்டத்தில் அனந்தி சசிதரன், வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி துணிவற்றவர், எம்மை இப்பாதையால் நடந்து சென்று சந்திக்க கூட பொலிஸாரால் எமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பொலிஸார் இனவாதத்தை தூண்டுகின்றனர்
பொலிஸார் இனவாதத்தை தூண்டுகின்றனர், தமிழிலும் உரையாடவில்லை சிங்களத்தில் பேசி இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் பல மணி நேரங்கள் முறுகல் நிலை காணப்பட்டது.
சிவாஜிலிங்கம் பொலிஸாரை பல வார்த்தை பிரயோகங்களால் சாடிக்கருத்து வெளியிட்டதுடன் பொலிஸாரும் தமது கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

தனது 3வது மகனின் முதல் பிறந்தநாள், கியூட்டான போட்டோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. கியூட் க்ளிக் Cineulagam
