யாழ்.மண்டைதீவில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: சம்பவ இடத்திற்கு சமூகமளிக்காத திணைக்களத்தினர்

Jaffna Northern Provincial Council S Shritharan SL Protest Sri Lankan political crisis
By Theepan Jul 12, 2023 06:09 AM GMT
Report

காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நில அளவை திணைக்களத்தினர் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டம் மண்டைதீவு - கடற்படை முகாமிற்கு அருகில் இன்றைய தினம் (12.07.2023) காலை முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று (12.07.2023) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள்

இந்த அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் இன்று (12.07.2023) காலை.7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

யாழ்.மண்டைதீவில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: சம்பவ இடத்திற்கு சமூகமளிக்காத திணைக்களத்தினர் | Protest In Jaffna Mandaitivu

குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினர்

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதன்போது "எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்" என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசியுள்ளார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மண்டைதீவில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: சம்பவ இடத்திற்கு சமூகமளிக்காத திணைக்களத்தினர் | Protest In Jaffna Mandaitivu

ஈஸ்வரபாதம் சரவணபவன் கருத்து

போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அரசாங்கம் திட்டத்தைத் தீட்டி தங்களுடைய நிகழ்ச்சி நிரலை ஒப்பேற்றிக் கொண்டு செல்கின்றார்கள்.

அதிலும் தற்போது பிடித்து வைத்திருக்கும் காணிகள் யாவும் வளம் நிறைந்த காணிகள். குறிப்பாக பொன்னாலை மக்கள் குடிநீருக்காக பவுசர் மூலம் நீரைப் பெறுகையில் குடிதண்ணீர்க் கிணற்றைக் கடற்படை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

எங்கெங்கு புதைகுழிகள் உள்ளதோ அந்த இடங்களை அடையாளப்படுத்தி தங்களுடைய புத்த கோயிலைக் கட்டுகின்றனர். இவை பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிந்தும், அரசாங்கத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளும் கையறு நிலையிலுள்ளனர்.

யாழ்.மண்டைதீவில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: சம்பவ இடத்திற்கு சமூகமளிக்காத திணைக்களத்தினர் | Protest In Jaffna Mandaitivu

இன்றும் தமிழ்ப் புலனாய்வாளர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு நன்கு சிங்களம் தெரியும். ஆகவே இவை பற்றி அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் கூற வேண்டும்.

வேறு நாடுகளிலெல்லாம் இவ்வாறான நிலைமைகள் இருந்தாலும் இங்கு எதிர்த்துக் கதைத்தால் வேலை பறிபோகும் நிலையுள்ளது. சரத் வீரசேகர நீதித் துறையைத் தூக்கி எறிகின்றார்.

தமிழர்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் விடயங்களை இல்லாமல் செய்யும் நிகழ்ச்சி நிரலே காணப்படுகின்றது.

யாழ்.மண்டைதீவில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: சம்பவ இடத்திற்கு சமூகமளிக்காத திணைக்களத்தினர் | Protest In Jaffna Mandaitivu

வடக்கு கிழக்குப் பகுதிகள்

அதுவும் வடக்கு கிழக்கில் சாதுரியமாக நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளனர். நாங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தாது விடின் தங்கள் நடவடிக்கைகளைச் சாதுரியமாக முன்னெடுப்பார்கள்.

வருகின்ற கிழமை கனேடியத் தூதுவர் இங்கு வரும் பொழுது அவர்களுக்கு இவ் இடங்களைக் காண்பிக்கும் தருணமே இவை. சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்ல வழிகாட்டும்.

எனவே ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால், வடக்கு கிழக்குப் பகுதிகள் போராட்ட களமாக மாற்றப்பட்டுத் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்தி: கஜிந்தன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US