யாழில் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று(01.05.2026) இடம்பெற்றுள்ளது.
17 வருட போராட்டம்
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருந்தார்கள்.
இதுவரையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், காணிகளை விடுவிக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று(01) போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போராட்டக்காரர்களை சந்தித்து பேசியதுடன், அவர்களுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளார்.




இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி