மன்னாரில் புதிய அதிபரை நியமிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
மன்னார் அல் அஸ்ஹர் மகா வித்தியாலய தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி நேற்றையதினம்(30) காலை பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கை
கடந்த சில வருடங்களாக ஆசிரியர் ஒருவர் அதிபராக செயல்படும் நிலையில் பாடசாலை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளதாகவும் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியின் தரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் வேறு பாடசாலைகளுக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டியதோடு பாடசாலை சூழலில் பல்வேறு பின்னடைவுகளை எதிர் நோக்குவதாகவும் சுட்டிக்காட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றக் கோரியும் முதலாம் தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமது பிள்ளைகளை உடனடியாக பாடசாலையில் இருந்து நிறுத்தப் போவதாகவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாடசாலைக்கு முன் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மன்னார் வலய கல்வி அலுவலக அதிகாரிகள் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உரிய அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
பத்து நாட்கள் அவகாசத்தை
அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று வலய கல்விப் பணிப்பாளரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

வலயக்கல்வி பணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும், அதற்கான கால அவகாசம் தேவை எனவும் தமது அதிகாரத்திற்குள் குறித்த பாடசாலை இல்லை என்பதையும் ஆனால் இதற்கான நடவடிக்கையை தாம் உரிய அதிகாரிகளுடன் பேசி சாதகமானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிப்பதாக தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை தருமாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று மன்னார் அரசாங்க அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
போராட்டத்தை கவனத்தில் எடுத்து அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதுடன் பாடசாலை அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துவதாகவும் இந்த நடவடிக்கைக்காக பத்து நாட்கள் அவகாசத்தை அரசாங்க அதிபர் கோரி தங்களுக்கு சாதகமான பதிலை பெற்று தருவதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து






அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam