தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையிர் தாக்குதல்: சென்னையில் போராட்டம்!
அண்மையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் ஆதரவுக் குழுவான மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்குள், தரங்கம்பாடி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர் மீதான வன்முறையை இலங்கை நிறுத்த வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை தூதரகத்தை முற்றுகை
இலங்கை அரசுடன் இந்திய இராணுவம் இணைந்து தமிழக கடற்றொழிலாளர் மீதான தாக்குதலை ஊக்குவிக்கிறது.
மேலும், இந்திய அரசு இதனை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டவே இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய அரசைக் கோருவதாகவும் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்கார்கள், சென்னையில் உள்ள
இலங்கை உயர்ஸ்தானிகரகத்தை நோக்கிச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam