அபகரிப்புக்களுக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) - வாகரையில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு, இறால் பண்னை, நில அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக முற்போக்கு தமிழர் கழகம் கட்சி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (02.05.2024) இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalendiran) தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாகரையில் இருந்து கதிரவெளி பிரதேச செயலகம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனு கையளிப்பு
இதன்போது, மண்ணகழ்வு, கனியவள அகழ்வு மற்றும் இறால் உற்பத்திக்கான நில அபகரிப்பு போன்றவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊர்வலத்தில் பொது அமைப்புக்களும் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
