இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கண்டித்து மன்னாரில் கண்டன போராட்டம் (Photos)
இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகையினால் இடம் பெற்ற அனர்த்தத்தின் போது யாழ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த 2 மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து கண்டன போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மாவட்ட இணைப்பாளர் எ.பெனடிற் குரூஸ் தலைமையில் இன்று (5) மன்னார் புதிய பஸ் நிலையத்திற்கு முன் குறித்த போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றது.
இதன் போது யாழ்ப்பாணத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய வருகையின் போது ஏற்பட்ட அனர்த்தத்தின் போது உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இதன்போது யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri