தேசிய வளங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் (Video)
தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்றைய தினம் கொழும்பு,கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கத்தினர் இலங்கை மின்சார சபை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பேரணி காரணமாக கோட்டை தனியார் பேருந்து நிலையம் தொடக்கம், கோட்டை புகையிரத நிலையம் வரை கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த தொழிற்சங்கததினர் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இலங்கை ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் மகஜரை கையளிக்க முயன்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடும் ஏற்பட்டது.
இதன்போது பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சார ஒன்றிணைந்த அமைப்பு ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் கருத்து தெரிவிக்கையில்,
நீங்கள் இதனை மீளப்பெற வேண்டும். எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கி, எண்ணெயை விநியோகிக்கும் ஏகபோக உரிமையை இந்தியாவின் பல நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
இதனால்தான் நாம் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தோம். எதுவும் இடம்பெறவில்லை.திருட்டுத்தனமாக செய்த ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாதாம். இது மிக ஆபத்தான விடயம்.
எங்கள் வியர்வையால், இரத்தத்தால் உருவானது. அதனை விற்பனை செய்ய அனுமதிக்கமாட்டோம். நாங்கள் எங்கள் இறுதித் தீர்மானத்திற்கு முன்னதாக நாம் உங்களிடம் இந்த மகஜரை கையளிக்கின்றோம்.
மீளப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் உங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தாய்நாட்டிற்கு செல்லுங்கள்.கோட்டாபய மற்றும் பசிலுக்கு வேறு நாடுகள் காணப்படுகின்றன.
எமக்கு வேறு நாடுகள் இல்லை. மரம் கொத்தி வாழை மரத்தை கொத்தியுள்ளது. பிரச்சினை எமக்கில்லை. உங்களுக்குத்தான்.நாட்டின் மிக முக்கியமான மூன்று இடங்களில் அரசாங்கம் கைவைத்துள்ளது. இது நல்லதுக்கு அல்ல.
நாங்கள் மகஜரை கையளித்து இரண்டு மூன்று நாட்கள் மாத்திரமே நாம் பொறுமை காப்போம்.அதன் பின்னர் எங்களது மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம் என்பதை கூறிக்கொள்கின்றோம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 9 மணி நேரம் முன்

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam

ஒரு வருடத்திற்கு இந்த 3 ராசியையும் அசைக்க முடியாது....2023 வரை அசுர வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்! Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022