சட்டவிரோத மதுபான நிலையத்தை உடன் மூடுங்கள்: மன்னாரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்(Video)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள 'சட்டவிரோத மதுபான' விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் (11.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தை அகற்றி வேறு ஒரு இடத்தில் அமைக்குமாறும் இதனால் பாரிய பிரச்சினை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த மதுபான நிலையத்தை மையமாக வைத்து குறித்த பகுதியில் வேறு போதைப் பொருள் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து காணப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போராட்டத்திற்கு வெற்றி
சம்பவ இடத்திற்கு பொலிஸாரினால் வரவழைக்கப்பட்ட அடம்பன் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு விற்பனை நிலையம் மூடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விற்பனை நிலையம் மூடப்படுவதனால் இத்தொழிலை நம்பி வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் சுமார் 10 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் "தொழிலாளர்களுக்கு எதிராக
நாங்கள் செயற்படவில்லை எனவும், குறித்த பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தை
வேறு இடத்திற்கு மாற்ற கோரி தாம் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததாகவும்" போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.














சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
