நீதிமன்ற சாட்சியங்களை அச்சுறுத்த வேண்டாமென வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஏ9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துமாறும், குற்றவாளிகளை பாதுகாக்காது அவர்களுக்கு தண்டனை வழங்கவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதேவேளை நீதிமன்ற சாட்சியங்களை அச்சுறுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்த அதேவேளை, கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri