இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு எதிராக போராட்டம்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு எதிராக வடமாகாண மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் முல்லைத்தீவிலிருந்து,பருத்தித்துறைக்குச் சென்ற சுமார் 100 மீன்பிடி படகுகளில் பயணித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய மீனவர்கள், தமது மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதைத் தடுக்க இலங்கை அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பல ஆண்டுகளாக இருந்த இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லாததால், தாம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.