நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டம்
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பெறுமதி சேர் வரி 18 வீதமாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
வரி நெருக்கடி
நாடு தழுவிய ரீதியில் மக்களை அணி திரட்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் போராட்டம்
இந்த போராட்டத்தின் முதல் கட்டமாக எதிர்வரும் 30 ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பொது மக்கள், சிவில் அமைப்புக்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
