மின்சார நெருக்கடிக்கு தீர்வு முன்வைத்த பொதுமகன்-செய்திகளின் தொகுப்பு
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக பாதரசத்தை எரிபொருளாக பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றை கம்பளை தொழுவ பிரதேசத்தை சேர்ந்த விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
சுமார் ஆறு வருடங்களாக பாதரசம் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பிரதிபலனாக இந்த புதிய கண்டுபிடிப்பை செய்ய முடிந்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 7 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை அவர் உற்பத்தி செய்து வருகிறார்.
அத்துடன் அந்த மின்சாரத்திலேயே தனது வீட்டில் இருக்கும் மின் விளக்குகள் உட்பட இலத்திரனியல் பொருடகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,