மட்டக்களப்பில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் (Photo)
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீரான முறையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேற்று (17) முன்னுரிமை அடிப்படையில் வரிசைக்கிரமமாக மிகவும் சீரான முறையில் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
சீரான முறையில் எரிபொருள் விநியோகம்
மேலும் குறித்த எரிபொருள் நிலையத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான தேசபந்து எம்.செல்வராஜா அவர்கள் எரிபொருள் நிலையத்திலேயே நின்று மக்களை ஒழுங்குபடுத்தி சீரான முறையில் அனைவருக்கும் பெட்ரோல் வழங்குவதற்கு வசதிகளை அமைத்துகொடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து மக்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.