நெருக்கடியான சூழ்நிலையில் பதவி விலக தயாராகும் முக்கியஸ்தர்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விரைவில் அந்த பதவிக்கு மேலும் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.