ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை (Photos)
ஹட்டன் - ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குடிநீர் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உரிய இடம் அடையாளம் காணப்பட்டதுடன், இடத்துக்குரிய ஒதுக்கீட்டு அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடத்துக்குரிய ஒதுக்கீட்டு அனுமதி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்
தொண்டமானின் ஆலோசனைக்கமையவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்,
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் வழிகாட்டலின்
கீழ் குறித்த பகுதிக்கு குழுவொன்று அண்மையில் நேரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் தோட்ட மக்களுடன் அமைச்சின் பிரதிநிதிகள் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
மேலும், ரொத்தஸ் - கொலனியில் வாழும் சுமார் 600 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்பு செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் தலைமையிலான இந்த குழுவில் நுவரெலியா பிராந்தியத்தின் சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் அதிகாரி உட்பட பலரும் கலந்துக்கொண்டிருந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
