இலங்கை உணவுப் பாதுகாப்பில் முன்னேற்ற நிலை
இலங்கையில் 2023 பெப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐக்கிய நாடுகளின் உணவு திட்டம், விவசாய அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக நாடுகள் இணைந்து மேற்கொண்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் படி, இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருகிறதாக தெரியவருகிறது.
எனினும் 3.9 மில்லியன் மக்கள் அல்லது இலங்கை மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அறிக்கை மதிப்பிடுகிறது.
இது கடந்த ஆண்டு ஜூன் - ஜூலை மாத காலப்பகுதியின் நிலைமையில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை
இந்தநிலையில் கிட்டத்தட்ட 10,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், இது கடந்த ஆண்டு 66,000 பேராக இருந்தது.
உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றத்துக்கு, உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
இருப்பினும் சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.
பெருந்தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்டச் சமூகங்களுக்குள்ளும், சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களில் தங்கியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை தொடர்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
