பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் நிறைவு நிகழ்வு (Photos)
பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 16 நாள் வேலைத்திட்டம் இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நிறைவு பெற்றது.
பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றது.
இறுதி நாளான இன்றைய தினம் பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியுாகத்தர், உதவி திட்ட உத்தியோகத்தர், பெண்கள் வாழ்வுரிமை சிறுகுழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கண்டாவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிககாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அனைத்து இன, மத, சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக சமாதான வெள்ளை புறா பறக்க விடப்பட்டதுடன், பலூன்களும் பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri