கிழக்கு மாகாணத்தின் முன்னணி விற்பனை நிலையங்களில் பொருட்கள் இல்லை: ஏமாற்றத்தில் மக்கள் (Photo)
முன்னணி விற்பனை நிலையமான சதொச விற்பனை நிலையங்கள் பொருட்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் பொருட்கள்
வாங்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
ஏமாற்றத்தில் மக்கள்
மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் பொருட்கள் இன்மையால், அந்நிலையங்களுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் செல்வதை காண முடிகின்றது.
சதொச விற்பனை நிலையங்களில் கடந்த சில நாட்களாக கையிருப்பில் உள்ள பொருள்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது பல சதொச விற்பனை நிலையங்கள் பொருள்கள் இல்லாது வெறுமையாக காணப்படுகின்றன.
சதொச விற்பனை நிலைய அலுவலர்களின் கவலை
தங்களுக்கு சதொச தலைமைக் களஞ்சியசாலைகளில் இருந்து நீண்ட நாட்களாக பொருள்கள் வந்து சேரவில்லை என சதொச விற்பனை நிலைய அலுவலர்கள் தெரிவிக்கின்னறர்.
“முன்னதாக சதொச விற்பனை நியைலங்களில் சீனி மற்றும் அரிசியை தனியே வாங்க முடியாத கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
அதனால் அத்தியாவசியமாக தமக்கு சீனியையும் அரிசியையும் வாங்க வரும் மக்கள் அரிசிக்கும் சீனிக்குமாகச் சேர்த்து தமக்கு அத்தியாவசியமில்லாத பொருள்களையும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சதொசவில் இருந்த ஏனைய பொருட்களும் விற்று தீர்ந்துவிட்டது.
மக்கள் இப்பொழுது பொருள்களை வாங்க முடியாது நிர்க்கதி நிலையை அடைந்துள்ளார்கள்.
தனியார் கடைகளிலும் கூட்டுறவுக் கடைகளிலும் இப்பொழுது சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 300 ரூபாவாகவும் வெள்ளை சீனி 320 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது” எனவும் கூறினார்கள்.



