மின் உற்பத்தி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
உமா ஓயா நீர் மின் நிலையத்தின் அலகுகள் இலங்கை மின்சார சபைக்கு மின் உற்பத்திக்காக கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
இந்த பதவில் குறித்த பல்நோக்கு நீர்ப்பாசன வசதியின் கட்டுமான நிறுவனமான ஃபராப் உடனான சந்திப்பின் போதே தமக்கு இதனை தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி
இதன்படி, உமா ஓயா நீர் மின் நிலையத்தின் அலகு1 மற்றும் 2 முறையே 2023 ஒகஸ்ட் மற்றும் 2023 செப்டெம்பர் முதல் மின் உற்பத்திக்காக கிடைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது முடிவடைந்தவுடன் 120 மெகாவாட் நீர் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Dr Ali Vakili, Managing Director of Farab, Project Manger of Uma Oya & representatives of Farab visited the Ministry of Power & Energy yesterday. Farab, the Construction company of the Uma Oya Multipurpose Irrigation Facility, conveyed that the unit 1 of Uma Oya Hydro Power… pic.twitter.com/dNIVvFTUG8
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 19, 2023

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
