வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மருந்துக் கொள்வனவு மோசடியாளர்கள் - செய்திகளின் தொகுப்பு
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வெவ்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெலிக்கடைச் சிறைச்சாலையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில சந்தேக நபர்கள் மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை என்பவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடைசியாக கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க, மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மஹரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர்களில் ஒருவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
