எரிபொருளின்மையால் கிளிநொச்சி கடல்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
கிளிநொச்சி - இரணைமாதா நகர் மற்றும் இரணைதீவு ஆகிய பிரதேசங்களில் எரிபொருளின்மையால் கடல்தொழிலாளர்களின் தொழில் முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச கடல்தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாளாந்த உணவிற்கே பெரும் கஸ்ரங்களை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமது தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தமக்கான எரிபொருளைப் பெற்றுத் தருவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வாழ்வாதார பிரச்சினைகள்
எரிபொருள் இல்லாத நிலையில் தாங்கள் இரண தீவுக்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலும் இரணைதீவில் தங்கியிருக்கும் மக்கள்மீள திரும்ப முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தங்களுடைய வாழ்வாதார
நோக்கிலே முன்னெடுக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை பார்வையிடுவதற்கு அல்லது
அட்டைப் பண்ணைகளைச் சென்று பராமரிப்பதற்கு கூட எரிபொருள் இல்லாத நிலை
காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
