தனியார் நிறுவனங்களை இணைக்க திட்டம்: தொலைத்தொடர்பு சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு சுயாதீன நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், நாட்டின் தொலைத்தொடர்பு சட்டங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தற்போதைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களால் மட்டுமே கோபுரங்களை நிர்மாணிக்க முடியும்.
இந்நிலையில், கோபுர நிர்மாணிப்பை மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவது உள்ளிட்ட திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
தொலைத்தொடர்பு கோபுரங்கள்
இதற்கமைய, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு கோபுரங்களை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த திட்டத்திற்கு திருத்தங்கள் அவசியமாகின்றன என்று தொலைத்தொடர்புகள் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தை (Kanaka Herath) மையப்படுத்தி டெவலொப்பிங் டெலிகொம் (Developing Telecom) என்ற இணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவானது 276 புதிய கோபுரங்களை நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
அதேவேளை, இது இணைய வசதிகளை மேம்படுத்துவதற்கும் 5ஜியின் வெளியீட்டிற்கு உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக 2023இல் 50 கோபுரங்கள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
