தனியார் பேருந்து உரிமையாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பொதுப் போக்குவரத்து வாகனங்களை கண்காணிப்பதற்கு சீருடையில்லாத பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தும் தீர்மானத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம்
அத்துடன், தனியார் பேருந்து சேவையின் மீது பொலிஸார் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உரிய கட்கட்டுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் சில வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
