தனியார் பேரூந்துகளில் முன்கூட்டிய அட்டைக் கொடுப்பனவு முறை! புதிய தகவல் வெளியானது
இலங்கையின் தனியார் பேரூந்துகளில் முன்கூட்டிய கட்டணம் செலுத்தும் முறையாக அட்டைக் கொடுப்பனவை ( Pre paid Card) நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த முறைக்கு ஏற்கனவே இலங்கை மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் அமைச்சு மட்டத்தில் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கெமுனு விஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு, நடைமுறைக்கு வந்தால், பயணிகள், தமது போக்குவரத்தின்போது நேரடியாக கட்டணத்தை செலுத்தாமல் முன்கூட்டியே கட்டணங்களை செலுத்திய அட்டைகளை பயன்படுத்துவர்.
இதன் காரணமாக, கட்டணங்களின் மீதித் தொகையை வழங்குதல் உட்பட்ட பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று கெமுனு தெரிவித்துள்ளார்.
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri