தனியார் பேரூந்துகளில் முன்கூட்டிய அட்டைக் கொடுப்பனவு முறை! புதிய தகவல் வெளியானது
இலங்கையின் தனியார் பேரூந்துகளில் முன்கூட்டிய கட்டணம் செலுத்தும் முறையாக அட்டைக் கொடுப்பனவை ( Pre paid Card) நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த முறைக்கு ஏற்கனவே இலங்கை மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் அமைச்சு மட்டத்தில் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கெமுனு விஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு, நடைமுறைக்கு வந்தால், பயணிகள், தமது போக்குவரத்தின்போது நேரடியாக கட்டணத்தை செலுத்தாமல் முன்கூட்டியே கட்டணங்களை செலுத்திய அட்டைகளை பயன்படுத்துவர்.
இதன் காரணமாக, கட்டணங்களின் மீதித் தொகையை வழங்குதல் உட்பட்ட பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று கெமுனு தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 22 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan