பேருந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிப்பு
நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணங்கள் சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதனால் பேருந்து கட்டணங்கள், முச்சக்கர வண்டி கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் உள்ளிட்ட சகல கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளன.
போக்குவரத்து கட்டணம்
இதன்படி எரிபொருட்கள் மீது 18 வீதம் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட உள்ளது.
மேலும், போக்குவரத்து கட்டணங்களைப் போன்றே வாகன உதிரிப் பாகங்களின் விலைகளும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்போதைய நிலைமைகளில் பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 10 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் காலங்களில், பேருந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 49 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
