தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் மற்றுமொரு நடத்துனரால் குத்திக் கொலை!
வெலிகம பகுதியில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் மற்றுமொரு பேருந்து நடத்துனரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.பேருந்து நடத்துனர் பேருந்துக்குள் இருந்த மற்றொரு நபரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தனியார் பேருந்து இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றொரு தனியார் பேருந்தின் நடத்துனர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பயணிகள் பேருந்து இயக்குநர்களுக்கு இடையிலான போட்டி இப்போது கொலைக்கு வழிவகுத்தது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam