சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கை சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி பிரச்சினைக்குப் பதிலளிக்கும் வகையில், அரசாங்கம் வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறைச்சாலைகளின் அதிகபட்ச கொள்ளளவு 13,000 கைதிகளாக இருக்கும் போது, தற்போதைய தொகை 29,000 ஆக இருப்பதாக அமைச்சர் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே சிறைச்சாலைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்க வீட்டுக் காவலில் வைக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மீளாய்வு செயல்முறை
அத்துடன், முழுமையான மீளாய்வு செயல்முறையின் மூலம் விசேட மன்னிப்பு வழங்குவதற்கான, பரிந்துரை குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
இந்த அணுகுமுறை நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்யும் அதே வேளையில் நெரிசல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
