கைதிகளுக்கு வீடுகளுக்கு சென்று வர விடுமுறை
நாட்டின் 17 சிறைச்சாலைகளில் நல்லொழுக்கத்துடன் இருக்கும் 101 கைதிகளுக்கு நாளை முதல் வீடுகளுக்கு சென்று வர விடுமுறை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலைகளுக்குள் நடத்தப்படும் சமய, தொழில் கல்வி பயிற்சிகள் உட்பட சிறைச்சாலை புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்து நல்லொழுக்கத்துடன் செயற்பட்ட 101 கைதிகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்த கைதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 7 , 10 மற்றும் 14 நாட்கள் என இரண்டு முறை விடுமுறை வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர்(நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
விடுமுறையில் சென்று சிறப்பாக மற்றும் பலன் அளிக்கும் வகையில் தமது உறவினர்களுடன் காலத்தை செலவிட்டு, திரும்பும் கைதிகளை சிறைச்சாலை அனுமதி சபையில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 53 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
