ரஷ்ய - உக்ரைனின் கைதி பரிமாற்றம்: நெகிழ்ந்த ஜெலென்ஸ்கி
ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) இடையே 300 பிணை கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பில் இருந்தும் 150 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் ஆரம்பித்ததில் இருந்து இது மிகப்பெரிய பிணைக் கைதி பரிமாற்றங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
நன்றி தெரிவிப்பு
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், சுமார் 150 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அணுமின் நிலையம் போன்ற முக்கிய இடங்களை பாதுகாத்த 189 உக்ரேனிய வீரர்கள் நாடு திரும்பி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிணைக் கைதிகள் பரிமாற்றத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழிவகுத்து தந்துள்ள நிலையில் உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை விடுவிப்பதில் பங்களிப்பு செய்தமைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam