களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

தீவிர தேடுதல்
கிளிநொச்சி, இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கைதியை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.
இதன்போது பகல் 12 மணியளவில் கழிவறைக்கு செல்ல வேண்டுமென கூறியதால் சிறைக்காவலர் அழைத்துச்சென்று வெளியில் காவல் இருந்துள்ளார். இதன்போது கழிவறை கூரையை கழற்றி அதனூடாக தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்ய பொலிஸாரும், சிறைக்காவர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam