அநுர அரசின் மற்றுமொரு அதிரடி : பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்
விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பல மூத்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.
சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட கைதிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
தேவையான நடவடிக்கை
அவர்களை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் சிறையில் நடந்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. “இந்த சம்பவங்கள் அனுராதபுரம் சிறையில் மட்டுமல்ல. வேறு பல சிறைகளிலும் நடந்துள்ளன.
சிறை அதிகாரிகள்
எனவே, அனைத்து சிறைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பதிவுகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் முடிவடையும் நேரத்தில் மேலும் பல சிறை அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று மூத்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        