கைதிகளை தாக்கிய சிறை காவலர்கள் கைது
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றும் இரண்டு சிறை காவலர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக தங்காலை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறை காவலர்களை தாக்கிய சம்பவம் தொடர்பான கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமில குமாரசிங்க மற்றும் துலந்த ராஜபக்ச ஆகியோரை தாக்கிய சம்பவம் சம்பந்தமாக 5 சிறை காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 23 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் உத்தரவின் பேரில் தங்காலை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நந்தசிறி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
