வரிசையில் காத்திருக்கும் விசேட தேவையுடையோர் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
விசேட தேவையுடையவர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தேவையான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து விசேட தேவையுடையவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எரிபொருள், உணவுப் பொருட்கள், சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடைய இவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு உரிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan