இலங்கை பக்தர்களுக்கே முன்னுரிமை:சபரிமலையில் நடப்பது என்ன...! (Video)
அனைத்தும் இருந்தும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வதன் ஊடாக கடவுள் ஐயப்பனை தரிசிக்கின்றோம் என நதீஸ்காந்த் சுவாமி தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக சபரி மலை யாத்திரையை மேற்கொண்டு புனித மாலையை அணிந்துள்ள நதீஸ்காந்த் சுவாமி லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடவுள் பக்தி உள்ளவர்கள் முதல் இல்லாதவர்கள் வரை சபரி மலைக்கு செல்பவர்களை பார்த்து சாமி என அழைப்பதற்கு காரணம் நீங்கள் கடவுளாக மாறுகின்றீர்கள்.
இந்நிலையில் இலங்கை சாமிமார்களை பார்த்தவுடன் ஏனைய பக்தர்கள் நீங்கள் மிகவும் கண்ணியம் கட்டுப்பாடுடன் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் என வணங்குகின்றனர் என தெரிவித்துள்ளார்.