சிறிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகலாம் - பிரதமர் அறிவிப்பு
அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகும் நோக்கம் இருந்தால், எந்த நேரத்திலும் அவர்கள் அந்த தீர்மானத்தை எடுக்க முடியும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அறிவித்துள்ளார்.
அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகும் தேவை இருந்தால், அவர்களை பலவந்தமாக வைத்திருக்கும் எந்த தேவையும் தமக்கில்லை எனவும், யார் அரசாங்கத்தை விட்டு விலகினாலும் அரசாங்கம் கவிழாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சிறிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி விடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன.
எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.
உலக சந்தையின் தற்போதைய நிலைமைக்கு அமைய பல நாடுகளில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது.
கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிலைமையை எமது நாடும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இப்படியான சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்குமாயின் இலங்கையின் நிலைமையானது இதனை விட மிக மோசமாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 22 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam