பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்புக்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பேக்கரி பொருட்களின் விலையினை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க கூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலாபம்
கோதுமை மாவின் விலையினை மேலும் 30 ரூபாவினாலும், முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும். எனினும் வர்த்தக மாஃபியாக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கோதுமை மா, தேங்காய் எண்ணெய், முட்டை உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இது தமது தொழிற்துறையை பாரியளவில் பாதித்துள்ளதாலேயே, பேக்கரி உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியாதுள்ளது.
எனவே இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
