நாட்டில் தீவிரப்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்
இவ்வருட பொசன் பண்டிகைக்காக சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விசேட பாதுகாப்பு திட்டங்கள்
இதன்படி பொசன் பண்டிகை நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் சுமார் ஆறாயிரம் பொசன் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் மேல்மாகாணத்தில் உள்ள விகாரைகளில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அறிவுறுத்தல்
இதற்கென சுமார் 19062 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 370 பேரும், முப்படையைச் சேர்ந்த 607 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், இரவு பகலாக நடமாடும் மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகள் மூலம் பிரதேச பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
