ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி
வற் வரி 18%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் முதல் பாடசாலை உபகரணங்களின் விலையானது தற்போதைய விலையிலிருந்து இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் கவலை
மேலும், இந்த வருட இறுதிக்குள் தேவையான பாடசாலை உபகரணங்களை தற்போதைய விலையிலேயே கொள்வனவு செய்வது சிறந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தற்போதைய விலையே தங்களின் கொள்முதல் செய்யும் இயலுமையை விட அதிகமாக உள்ளது என கவலை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் தெரிவிக்கையில் கடந்த மாதத்தை விட பாடசாலை உபகரணங்களின் விலையானது இந்த மாதம் 05 - 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினாலும் போதிய வருமானம் இன்மையாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வற் வரி அதிகரிப்பானது மக்களின் சுமையை வெகுவாக அதிகரிப்பதோடு குறிப்பாக பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பினால் பெற்றோர்கள் துயர நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
