இலங்கையில் பொதுமக்களுக்கு மேலும் ஒரு சுமை. கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து விநியோகம் குறைந்த நிலையில், கோதுமை மாவின் மொத்த விலை கிலோ ஒன்று 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்
இந்தநிலையிலேயே கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொத்து ரொட்டியின் விலை நாளை முதல் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது
அதேநேரம் சிற்றுண்டிகளான ரோல்ஸ், மரக்கறி ரொட்டி மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை நாளை முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில் பாணின் விலை இன்று இரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
இதேவேளை கோவிட் காரணமாக பல நாடுகளிலும் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுமானால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam