ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்தினால் இரத்த ஆறு ஓடும் – மைத்திரி
நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்தினால் இரத்த ஆறு ஓடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் சாசனத்தின் பிரகாரம் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது எனவும் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்குள் குழப்பம்
மேலும், தேர்தலுக்கு நாம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்சியின் உறுப்பினர்களுக்கு சொந்தமானது எனவும், கட்சி என்பது கொள்கைகளின் அடிப்படையிலானது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்
கொள்கை அடிப்படையில் கட்சிக்கு உரிமையில்லாதவர்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியை கைப்பற்றிக் கொள்ள முயற்சிப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் எனவும், ஏற்கனவே வேட்பாளரை தெரிவு செய்துள்ளதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri