ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறக் கூடாது : சம்பிக்க ரணவக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதிகளை மீறக் கூடாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்தது போன்று ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி வரையிலான காலப் பகுதியில் ஜனாதிபதி தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை
ஐக்கிய குடியரசு முன்னணியின் மாத்தறை மாவட்ட காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை முன்வைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதனை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொண்டதன் போது அளித்த வாக்குறுதியை மீறும் வகையிலானது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam