ஜனாதிபதிக்கான கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நாடாளுமன்ற நிதி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால், அவர் நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர், மேலும் அவர் ஓய்வு பெற்றவுடன், ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கும் உரிமையுடையவர்.
ஜனாதிபதியின் ஓய்வூதியம்
இந்த வழியில் இரண்டு ஓய்வூதியங்களை பெற விரும்பவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பெறும் ஓய்வூதிய பலன்களை நீக்குவதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பு, அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தை அதன் நிதி பணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
