ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் முன்கூட்டி நடாத்தப்படாது: ஜீ.எல்.பீரிஸ்
ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ முன்கூட்டி நடாத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிலர் விரைவில் பெரிய தேர்தல் ஒன்று நடைபெறும் எனக் கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடாத்தப்பட உள்ளதாகவே சிலர் நடந்து கொள்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத் தரப்பில் சில குறைபாடுகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை எனவும் அவற்றை எதிர்வரும் மூன்றாண்டுகளில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam