ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் முன்கூட்டி நடாத்தப்படாது: ஜீ.எல்.பீரிஸ்
ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ முன்கூட்டி நடாத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிலர் விரைவில் பெரிய தேர்தல் ஒன்று நடைபெறும் எனக் கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடாத்தப்பட உள்ளதாகவே சிலர் நடந்து கொள்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத் தரப்பில் சில குறைபாடுகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை எனவும் அவற்றை எதிர்வரும் மூன்றாண்டுகளில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri