சட்டங்கள் நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி விளக்கம்
சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது அரசியலமைப்பின் முழுமையான நடைமுறைக்கு மகாநாயக்கர்கள் இருவரும் தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர்.

உறுதிப்படுத்தவேண்டியது தமது பொறுப்பு
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் 13ஆவது அரசியலமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டியது தமது பொறுப்பு என்றும் அவர் கூறியதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்
13ஆவது சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா தமது வலியுறுத்தலை தொடர்ந்தும் விடுத்து வருகிறது. எனினும் தென்னிலங்கையின் சிங்கள கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்திய பிரதமரின் அழைப்பின்பேரில், விரைவில் எதிர்பார்க்கப்படும்
ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது, இது தொடர்பில் முக்கிய
முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam