மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்...! பந்துல குணவர்த்தன கேள்வி
அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தல் குறித்து சிலர் அவசரப்பட்டு கருத்து வெளியிட்டு வருகின்றனர் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை.
மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் சிலர் தமது சொந்தக் கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல்
அந்தக் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவர்கள் தமது சொந்தக் கருத்துக்களை தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளையே வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் மொட்டுக் கட்சி ஒன்றுகூடி
வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்.
வெற்றிபெறக்கூடிய சிறந்த வேட்பாளரே களமிறங்குவார். அவர் யார் என்று இப்போது
தெரியாது என தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
