அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் களமிறங்கலாம்!- கொடுக்கப்படும் அழுத்தம்
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் தான் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அத்தகைய வாய்ப்பு ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும்புகின்றது.
தற்போதுள்ள அரசியலமைப்பின்படி பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடமுடியாது.
ஜனாதிபதி வேட்பாளர்
குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் நாமல் ராஜபக்சவின் வேட்புமனுவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர், ஆனால் அவர் இன்னும் தயாராகவில்லை மற்றும் அனுபவமற்றவர் என்று கட்சியில் உள்ள மற்றவர்கள் கூறுகின்றனர்.
அவருக்கு நாடு தழுவிய ஆதரவு இருக்காது என்றும், மேலும் அனுபவம் தேவை என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க போன்ற வலிமைமிக்க
எதிர்க்கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கே வாய்ப்பு
கிட்டும் என்று பொதுஜன பெரமுன கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
